‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 10-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
குரோதி வருடம் மாசி மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 10.03.2025 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.43 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று அதிகாலை 02.50 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷ ராசி அன்பர்களே!
முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியா ளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற் பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
மிதுன ராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் மனஸ் தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
கடக ராசி அன்பர்களே!
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே!
உற்சாகமாகச் செயல்படும் நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட் டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர் பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர் கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி ராசி அன்பர்களே!
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
துலா ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே!
மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய நண்பர் களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மகர ராசி அன்பர்களே!
எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கும்பராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாம தமும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
மீனராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கா மல் நீங்களே செய்வது அவசியம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு அதிகாரிகள் உதவி செய்வார் கள். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.