வரலாற்றில் இன்று (03.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

டிசம்பர் 03 (December 03) கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1592 – “எட்வேர்ட் பொனவென்ச்சர்” என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.
1800 – மியூனிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.
1818 – இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.
1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903 – சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
1904 – வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1912 – பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
1917 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
1944 – கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971 – இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1976 – ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1978 – வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1989 – மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
1997 – நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

பிறப்புகள்

1753 – சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர், நெசவுத் துறையின் முன்னோடி (இ. 1827)
1795 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1879)
1833 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர் (இ. 1915)
1857 – ஜோசப் கொன்ராட், போலந்து-ஆங்கிலேய எழுத்தாளர், போர்வீரர் (இ. 1924)
1884 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
1886 – மன்னே சீகுபான், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (இ. 1978)
1889 – குதிராம் போஸ், வங்காளப் புரட்சியாளர் (இ. 1908)
1900 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமன் வேதியியலாளர் (இ. 1967)
1909 – கே. ராஜலிங்கம், இலங்கையின் மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத்தலைவர் (இ. 1963)
1925 – கிம் டாய் ஜுங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அரசுத்தலைவர் (இ. 2009)
1931 – விஜய்குமார் மல்கோத்திரா, இந்திய அரசியல்வாதி
1933 – பால் சோசப் கிரட்சன், டச்சு வேதியலாளர்
1935 – நெல்லை ஆ. கணபதி, தமிழக சிறுவர் புதின எழுத்தாளர்
1948 – புதுவை இரத்தினதுரை, ஈழத்துக் கவிஞர்
1960 – ஜூலியானா மூரே, அமெரிக்க நடிகை, எழுத்தாளர்

இறப்புகள்

1154 – நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) (பி. 1073)
1552 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் , புனிதர் (பி. 1506)
1882 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1803)
1894 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர் (பி. 1850)
1969 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்கறிஞர் (பி. 1888)
1979 – தியான் சந்த், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (பி. 1905)
1998 – முடியரசன், தமிழகக் கவிஞர் (பி. 1920)
2000 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர் (பி. 1917)
2010 – அநுத்தமா, தமிழக எழுத்தாளர் (பி. 1922)
2011 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1923)

சிறப்பு நாள்

மருத்துவர் நாள் (கியூபா)
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!