புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு..!

 புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு..!

ஃபெஞ்சால் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் 46 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் மழை கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் புதுச்சேரியில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் பாதுகாப்பு முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல், மழையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறந்து வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...