இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 29 வெள்ளிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 29-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.11.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.23 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று காலை 11.32 வரை சுவாதி. பின்னர் விசாகம்.உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் ஆதாயம் ஏற்படும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் விலகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிது அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

சிம்ம ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். ஆனால், உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முடிவுகளைத் தெளிவாகச் சிந்தித்து எடுப்பீர் கள். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர் கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

துலா ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில் களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று காரியங்கள் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விலகும். தாய்வழி உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார் கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சங்கடம் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பொறுமை அவசியம்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்கள் விவாதம் செய்ய வந்தால் விலகிச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!