இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக இலங்கையில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல வீடுகள், சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. விடாமல் பெய்து வரும் கனமழையால் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் பலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடங்குவர். மேலும், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலரும் மாயமாகியுள்ளனர். மாயமானவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!