‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 17-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.11.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.38 வரை பிரதமை. பிறகு துவிதியை.இன்று இரவு 08.33 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷ ராசி அன்பர்களே!
அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கினால் வெற்றி கிடைக் கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது. குடும்பத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.
ரிஷப ராசி அன்பர்களே!
அனுகூலமான நாள். ஆனாலும், புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். காலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். வீட் டில் பராமரிப்புப் பணிகள் அதிகரித்தாலும், சலித்துக்கொள்ளாமல் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்சனை ஏற்படக்கூடும்.
மிதுன ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகள் உற்சாகம் தரும். நண்பர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர் பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.
கடக ராசி அன்பர்களே!
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ் நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசி அன்பர்களே!
இன்று புதிய முயற்சி எதிலும் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி ராசி அன்பர்களே!
காலையில் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாக மாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
துலா ராசி அன்பர்களே!
இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலையவேண்டி இருக்கும். அதன் காரணமாக உடல் அசதியும் மனச்சோர்வும் ஏற்படும். ஆனால், வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரை யைக் கேட்டு அதன்படி நடந்துக்கொள்வார்கள். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.
தனுசு ராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைக ளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும்.
மகர ராசி அன்பர்களே!
அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவு கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமானவரை விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாகச் சற்று அசதி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.
கும்பராசி அன்பர்களே!
இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை மிகவும் அவசியம். புதிய முயற்சிகளை காலையி லேயே தொடங்கிவிடுவது நல்லது. மற்றவர்கள் கோபத்தில் பேசினாலும், நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
மீனராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு ஆடை, ஆபர ணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ் நிலை ஏற்படும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர் பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
