இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா!

இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா!
இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் மலேஷியா, துருக்கியில் இருந்து மேலும் பல பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடைவிதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மலேஷிய பிரதமர் மகாதிர் முகமதுவும், துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகனும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மலேஷியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு குறைந்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து திரவ இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், அலுமினிய வார்ப்புகள், கணினி உதிரி பாகங்கள் உள்ளிட்டவை, மற்றும் துருக்கியில் இருந்து எண்ணெய்கள், எஃகுத் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!