இன்றைய ராசி பலன்கள் ( ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்ட் 27-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஆவணி மாதம் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.08.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.30 வரை அஷ்டமி. பின்னர் நவமி .இன்று இரவு 08.54 வரை ரோகினி. பிறகு மிருகசீரிஷம்.சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

மிதுன ராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள் வது நல்லது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகு முறை அவசியம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்க ளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிக ரிக்க கூடுதல் உழைப்பு தேவை. வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படக் கூடும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அம்பிகை வழிபாடு நலம் தரும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தாயின் ஆலோ சனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்தும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்ப தைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி யில் செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சிரமங்கள் ஏற்படும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபா ரத்தில் வீண் செலவுகள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற் பனை எப்போதும் போல் இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று நினைத்த காரியத்தை முடிப்பதில் நேரமும் பணமும் விரயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் பணி யாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். நரசிம்மரை வழிபட கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

மீனராசி அன்பர்களே!

அனுகூலமான நாளாக இருக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கை யும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!