இன்றைய ராசி பலன்கள் ( ஆகஸ்ட் 21 புதன்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்ட் 21-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்று வீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் அனுசரித்துச் செல் வது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைப் போலவே இருப்பது மகிழ்ச்சி தரும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மனதில் சற்று சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணை யாக நடந்துகொள்வது அவசியம். முருகப்பெருமானை வழிபட மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவி களும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும். பிள்ளை களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண் பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளுடன் அனுசரணை யாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், சிலருக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப் பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் முயற்சி சாதகமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

மகர ராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவு கள் ஏற்பட்டாலும் அதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியே ஏற் படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

மீனராசி அன்பர்களே!

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்குமேல் உறவினர் களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் தேவைகளை நிறைவேற் றும் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று சிவபெருமானை வழிபடுவது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!