வரலாற்றில் இன்று (14.06.2024)

 வரலாற்றில் இன்று (14.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 14  கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது.
1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான்.
1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர்.
1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான்.
1381 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். இலண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர்.
1404 – வேல்சின் கிளர்ச்சித் தலைவர் ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றிக்கு எதிராக பிரான்சுடன் இனைந்தார்.
1618 – இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது.
1645 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நேசுபி சமரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இடச்சுக் கடற்படை மெட்வே முற்றுகை முடிவுக்கு வந்தது. ஐந்து நாட்கள் நடந்த இச்சமரில் அரச கடற்படை பெரும் தோல்வியைக் கண்டது.
1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் முன்னாள் மன்னர் இரண்டாம் யேம்சுடன் சமரில் ஈடுபட அயர்லாந்து வந்தார்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.
1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
1800 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய இராணுவத்தை போலந்து பிரீத்லாந்து சமரில் (இன்றைய உருசிய கலினின்கிராது) தோற்கடித்தன.
1822 – சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1830 – அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது. 34,000 பிரெஞ்சுப் படையினர் அல்ஜியர்ஸ் நகரை அடைந்தனர்.
1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர்.
1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
1888 – வெள்ளை இராசா பிராந்தியங்கள் சரவாக் இராச்சியம் என்ற பெயரில் பிரித்தானியக் காப்புநாடாயின.
1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1907 – நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
1926 – பிரேசில் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை செருமனி கைப்பற்றியது.
1940 – 728 போலந்துப் போர்க் கைதிகள் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
1941 – அனைத்து செருமனிய, இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியத்தில் அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானிய இராணுவம் பெர்ச் நடவடிக்கையைக் கைவிட்டது.
1946 – மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.[1]
1949 – இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கிமீ (83 மைல்) உயரத்திற்கு சென்று, விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.
1959 – கியூபாவில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு டொமினிக்கன் குடியரசுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் பெரும்பாலானோர் அங்கு கொல்லப்பட்டனர்.
1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்கெந்தீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன.
1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
2002 – புவியருகு விண்பொருள் “2002 எம்என்” 75,000 கிமீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றது.
2003 – விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2014 – உக்ரைனின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர்.
2017 – இலண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1444 – நீலகண்ட சோமயாஜி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1544)
1736 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1806)
1811 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க நூலாசிரியர், செயற்பாட்டாளர் (இ. 1896)
1864 – அலாய்ஸ் அல்சீமர், செருமானிய உளவியல் நிபுணர், மருத்துவர் (இ. 1915)
1868 – கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1943)
1889 – நட் உலுண்ட்மார்க், சுவீடிய வானியலாளர் (இ. 1958)
1928 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)
1928 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப மருத்துவர், மார்க்சியவாதி, புரட்சித் தலைவர், அரசியல்வாதி (இ. 1967)
1936 – எம். எஸ். கில், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
1946 – டோனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவர்
1948 – கௌதம நீலாம்பரன், தமிழக வரலாற்றுப் புதின எழுத்தாளர் (இ. 2015)
1961 – குயிலி, தமிழ்த் திரைப்பட நடிகை
1962 – எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூர் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர்
1967 – குமார் மங்கலம் பிர்லா, இந்தியத் தொழிலதிபர்
1968 – ராஜ் தாக்ரே, மகாராட்டிர அரசியல்வாதி
1969 – ஸ்டெபி கிராப், செருமானிய தென்னிசு வீராங்கனை
1986 – பிந்து மாதவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1992 – சீலா ராஜ்குமார், தமிழ் நடிகை, பரதநாட்டியக் கலைஞர்

இறப்புகள்

1801 – பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க இராணுவத் தலைவர், பிரித்தானிய உளவாளி (பி. 1741)
1920 – மக்ஸ் வெபர், செருமானிய சமூகவியலாளர், பொருளியலாளர் (பி. 1864)
1926 – மேரி கசாட், அமெரிக்க-பிரான்சிய ஓவியர் (பி. 1843)
1927 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1859)
1928 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (பி. 1857)
1936 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் (பி. 1874)
1946 – ஜான் லோகி பைர்டு, இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1888)
1961 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (பி. 1898)
1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)
1986 – ஓர்கே லூயிசு போர்கெசு, அர்ச்செந்தீன எழுத்தாளர் (பி. 1899)
2001 – சிறீபதி சந்திரசேகர், இந்தியக் கல்வியாளர், நூலாசிரியர், அரசியல்வாதி (பி. 1918)
2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் (பி. 1925)
2014 – தெலுங்கானா சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1951)
2019 – அ. தாமோதரன், தமிழக இந்தியவியலாளர் (பி. 1935)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (மலாவி)
விடுதலை நாள் (போக்லாந்து தீவுகள், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)
உலக குருதிக் கொடையாளர் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...