முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்
வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், நாளை தீர்ப்பளிக்கிறது, உச்சநீதிமன்றம். திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

கர்நாடகாவில்
, 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். – மஜத எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி: தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் – பெட்ரோல் விற்பனையாளர் சங்கம்

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது: ‘பவன்’ என பெயரிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு தேர்தல் இல்லை? காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாக குற்றச்சாட்டு. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி.
தேசியக் கொடியுடன் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை – பரபரப்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...