இன்றைய ராசி பலன்கள் ( 23 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 23 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 23ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.04.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.20 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று இரவு 11.00 வரை சித்திரை. பின்னர் சுவாதி. அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். எதிரிகள் பணிந்து வருவார்கள். பிறருக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற் படும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மிதுன ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக் கும். இன்று துர்கை வழிபாடு நன்மை தரும்.

கடக ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள் வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வாடிக்கையாளர்கள் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள். லாபமும் கூடுத லாகக் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சி களுக்கு உதவியாக இருப்பார்கள். விநாயகர் வழிபாடு நலம் தரும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரி களால் மறைமுக தொல்லைகள் ஏற்படக்கூடும். பைரவரை வழிபடுவது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். இன்று சிவபெருமானை வழிபடுவது நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல் வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். லாபம் வழக்கம்போலவே இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட சங்கடங்கள் குறையும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண் டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார். பிற்பகலுக்கு மேல் சகோதரர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் விற்ப னையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கண வன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. துர்கையை வழிபடுவது தடைகளைத் தகர்க்கும்.

மீனராசி அன்பர்களே!

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...