நீயில்லாமல் எதுவும் இங்கு பூரணமடையப்போவதில்லை

 நீயில்லாமல் எதுவும் இங்கு பூரணமடையப்போவதில்லை

காதலே கதியாகிப் போன பின் பெரிதாய் என்னதான்

மாறிடக் கூடுமென்று எதிர்பார்க்கிறாய்…

காலை அவ்வாறுதான் விடிகிறது..

. காற்றும் அவ்வாறுதான் வீசுகிறது‌‌…

கடலும் கூட அவ்வாறுதான் இரைகிறது.

.. காதலால் இங்கு எதைத்தான்

மாற்றிட முடியும் எனக்கேட்டிருந்தேன்

. ஆனால்.. தைரியம் சொல்லி தளர்ந்து போன

மனது சாந்தம் அடைவதற்கென

உன் ஸ்பரிசத்திற்குத்தான் தவம் கிடக்கின்றது

. தடைகளை எல்லாம் கடந்த பின்

ஓய்வெடுப்பதற்கென கண்கள்

உன் மடியினைதான் தேடிப் பார்க்கின்றன

. பதற்றத்தில் நடுக்கும் கைகள் பற்றிக் கொள்வதற்கென

உன் விரல்களைதான் காற்றில் தடவிப் பார்க்கின்றன.

ஒவ்வொரு வெற்றிகளும்

ஆகக் கூடிய பாராட்டென

உன் நெற்றி முத்தத்தைத்தான்

எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

தோல்விகளில் துவண்டு போன பின்னர்

சாய்வதற்கென உன் தோள்களைத்தான்

கன்னங்கள் வேண்டி நிற்கின்றன.

தனிமையில் வெறுமையாய் உலவுகையில் கூட

உன் குரல் கேட்டிடாதாவென்று

காதுகள் மான்றாடுகின்றன.

ஆக.. காதல் நிகழ்த்தும் மாயம்

தன்னுணர்வற்று சுயம்

தொலைத்தல்தான் தேவி!!

இனி நீயில்லாமல் எதுவும்

இங்கு பூரணமடையப்போவதில்லை

என்பதுதான்

இக்காதலின் பேராச்சரியம்

. Happy advance valentine’s Day

#மஞ்சுளாயுகேஷ்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...