இன்றைய ராசி பலன்கள் ( 28  நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 28-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.11.2023, சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.43 வரை பிரதமை. பிறகு துவிதியை. இன்று பிற்பகல் 02.39 வரை ரோகினி. பின்பு மிருகசீரிடம். சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுத லாகக் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் அறவே நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். செயல்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். மாலையில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கடக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர் களால் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரி களால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது உரிய கவனம் தேவை. வழக்கமான பணிகளிலும் எச்சரிக்கை அவசியம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட் டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

கன்னி ராசி அன்பர்களே!

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பப் பெரியவர் களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுக ளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக் கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம் போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன் றில் வாழ்க்கைத் துணை உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு வருவார். பிற்பகலுக்குமேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ஆஞ்சநேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,

மகர ராசி அன்பர்களே!

செயல்கள் அனுகூலமாகும் நல்ல நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நல னில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட மற்றவர்களால் இடையூறுகள் விலகும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க் கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இன்று விநாயகரை வழிபட நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

மீனராசி அன்பர்களே!

முற்பகலில் சோர்வு நிறைந்திருக்கும். புதிய முயற்சிளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார். மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!