இன்றைய ராசி பலன்கள் ( 22 நவம்பர் 2023 புதன்கிழமை )

 இன்றைய ராசி பலன்கள் ( 22 நவம்பர் 2023 புதன்கிழமை )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 22ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

தாய் வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். என்றாலும் தொடங்கும் காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்களில் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். தொடங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவைப்படும் நாள். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத் தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்களில் சிறு இழுபறியானாலும் சாதகமாக முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிக ளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். இன்று நரசிம்மரை வழிபட இடையூறுகள் விலகும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் என்பதால் கவலையில்லை. நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வராமல் இருந்த கடன் தொகை வந்து சேரும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். முருகப்பெரு மான் வழிபாடு நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு விலகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன்பாக தீர ஆலோசிக்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியா பாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளை நீக்கும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்ப டும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

இன்று பொறுமை மிகவும் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற் பட்டு நீங்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...