ரவீணாவிடம் ரகசியமாக  பேசியதன் மூலம் பிக் பாஸ் விதியை மீறிவிட்டாரா மணி சந்திரா …! | தனுஜா ஜெயராமன்

காதல் ஜோடிகள் இல்லாமல் பிக்பாஸா? வாய்ப்பில்லை ராசா என கங்கணம் கட்டி வேலை பார்ப்பது பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் எனலாம். பிக்பாஸ் 7 சீசனின் போட்டியாளர்கள் பற்றி தகவல் வெளியானவுடனே இந்த சீசனின் அமீர் பாவனி யார்? என ஆருடங்கள் ஆரம்பமானது.

நேற்றைய எபிசோட்டில் இரவு நேரத்தில் மணி சந்திராவும், ரவீனா தாஹாவும் பேசிக் கொண்டார்கள். என்ன பிரச்னை என்று ரவீனா கேட்க சொல்ல முடியாது, அதற்கு வாய்ப்பில் இல்லை என்று மணி கூறினார்.

ரவீணா தொடர்ந்து என்ன விஷயம் என்று தொடர்ந்து கேட்க, புரிஞ்சுக்கணும் என மணி சொல்கிறார். இதற்கு ரவீணா சிரித்தப்படி இருந்தார். இதனை அடுத்து, ரவீணாவின் உள்ளங்கையில் என்ன பிரச்சனை என்று எழுதி காட்டியுள்ளார் மணி. பின்னர், ஏய் சொல்லு என்று ரவீணா சிரித்தப்படி கேட்க, சொல்ல முடியாது என்று மணி சந்திரா ஓடியுள்ளது தற்போது பரபரப்பாகி வருகிறது.

ரவீணாவும் ஏற்கனவே நண்பர்கள் என ஒருபுறம் வக்காலத்து வாங்குகிறார்கள் ஒரு சிலர்.

திடீரென மணியின் கையை ரவீணா கடித்து விடுவார். அவர் கடித்த இடத்தில் ”டாட்டூ போட்டுக் கொள்ள வேண்டியது” எனத் தெரிவிக்க, பக்கத்தில் இருக்கும் ஐஷூ, “இது நல்லதுக்கு இல்ல” எனக் கூறுகிறார்.  இதுபோன்று ரவீனா மற்றும் மணியின் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல என இது குறித்து மக்கள் கலாய்த்து வருகின்றனர்.

இது குறித்து வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் கேட்பாரா? என்பது பிக்பாஸ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!