எம்.பி ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் !

 எம்.பி ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் !

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. இவர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேனி எம்.பி.யான இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ரவீந்திரநாத் எம்.பி., தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டி.ஜி.பி. யிடம் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த விவாகரத்து மனுவை ரவீந்திரநாத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...