அக்னிபாத் திட்டம்- வலுக்கும் எதிர்ப்பு

 அக்னிபாத் திட்டம்- வலுக்கும் எதிர்ப்பு

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்களைப் பணிக்கு தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்துக்கு இந்திய அளவில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பிஹார், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங் களில் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிஹார் பா.ஜ.க. அலுவலகத்துக்கு 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சேர்ந்து நேற்று (ஜூன் 17) தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர். ஹரியானாவில் நேற்று (ஜூன் 17)  மாலை 5.30 மணியில் இருந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்கள் கூறும்போது “இந்த திட்டத்தின்படி, வருங் காலத்தில் இந்திய ராணுவத்தில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவர். 75 சதவிகிதத்தினர் வெளியேற்றப்படுவர் என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

4 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுடன் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் எல்லாம் கல்லூரிப் படிப்பையும் முடித்து வேலைக்குச் செல்வர். அந்த நேரத்தில், நாங்கள் ராணுவ வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, வீடு திரும்ப முடியுமா?” என்று ஏற்கெனவே ராணுவத்துக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் கொந்தளிக்கின் றனர்.  “ராணுவத்தை வெறும் சம்பளம் தரும் பணியாகப் பார்க்காமல், வாழ்நாள் கனவாகப் பார்ப் போருக்கும் 4 ஆண்டுகாலப் பணி அறிவிப்பு அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. ”

இதன் காரணமாக வட மாநிலங்களில் உருவான வன்முறை, தென்மாநிலங் களுக்கும் பரவி உள்ளது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் இன்று ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசியக் கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இன்று அதேபோன்று தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் களைக் காவல்துறை கைது செய்தது.

இன்று 18-6-2022 சென்னையிலும் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய அளவில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் ரயில்களுக்குத் தீ வைக்கப் பட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் பிஹாரில் சாலை யிலும் தண்டவாளத் திலும் டயர்களைக் கொளுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகளை அடித்து நொறுக்கி எரித்தும் வன்முறையிலும் ஈடு பட்டு வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட் டுள்ளன. 

சரி அக்னிபாத் திட்டம்தான் என்ன?

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளிலும் நான்கு வருட ஒப்பந்தத்தில் ‘அக்னி வீர்’ எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப் பட உள்ளனர்.

மத்திய அமைச்சரவை இந்தப் புதிய பணி நியமன முறைக்கு இன்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய பணி நியமன முறை ராணுவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும், ராணுவத்தில் இளைஞர்கள் சேர ஊக்கு விக்கும். இந்திய ராணுவம் எப்போதும் இளமையானதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இது உருவாக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவ பட்ஜெட்டில் 5.2 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி சம்பளம் மற்றும் பென்ஷனுக்குச் செல்கிறது. இந்தத் திட்டம் மூலம் அந்தச் செலவு பெரிய அளவில் குறையும்.

இந்த அக்னிபாத் திட்டம் மூலம் சேரும் ராணுவ வீரர்களுக்குச்சம்பளம் மற்ற நிரந்தர வீரர்களைவிட குறைவாக இருக்கும். அதேபோல் இவர் களுக்கு பென்சன் கிடையாது. இதன் காரணமாகக் கூடுதல் ராணுவ வீரர்கள் குறைந்த நிதி செல வில் ராணுவத்தில் பணியில் இருப்பார்கள். இதன் காரணமாக மத்திய அரசுக்கு செலவு மிச்சமாகும். இதனால் மிச்சமாகும் தொகையை ராணுவத் தளவாடப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்த முடியும் என்று இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித் துள்ளது.

இத்தகைய திட்டம் பல்வேறு உலக நாடுகளில் உள்ளதுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் ராணுவ மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்னிபாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

இந்தத் திட்டத்தால் இளைஞர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு?

முப்படைத்தளபதிகள்மூலம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி யிடம் இந்தத் திட்டம் குறித்து முப்படை தளபதிகள் கடந்த வாரம் விளக்கிய நிலையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆண்டு ஊதியம்பிடித்தம் போக கைக்குக் கிடைப்பது வீரர்களிடம் பிடித்தம் செய்வதுஅரசு செலுத்துவது
முதல் ஆண்டு – ரூ.30,000 ரூ.21,000ரூ.9000ரூ.9000
2 ஆம் ஆண்டு- ரூ.33,000ரூ.23,100ரூ.9,900ரூ.9,900
3 ஆம் ஆண்டு- ரூ.36,500ரூ.25,580ரூ.10,950ரூ.10,950
4 ஆம் ஆண்டு- ரூ.40,000ரூ.28,000ரூ.12,000ரூ.12,000
 மொத்தம்ரூ.5.02 லட்சம்ரூ.5.02 லட்சம்

அக்னி வீரர்களின் நிதியும், மத்திய அரசு நிதியும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் அளிக்கப்படும். 

பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப் படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.

அக்னிபாத் ஆள்சேர்ப்புக் கொள்கையின் முக்கிய நோக்கம், இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும், ஓய்வுதியச் செலவுகளை யும் குறைப்பதுதான் என்று தகவல் வெளி யாகியுள்ளது. 

அக்னிபாத் திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணிக்கு அமர்த் தப்பட உள்ளனர். இவர்களுக்கு வயது வரம்பு 17.5 – 23 வயது வரை இருக்கும். 4 வருடப் பணியில் 6 மாதம் இவர்களுக்குப் பயிற்சி வழங் கப்படும். அவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரி வித்துள்ளது.

இதில் நிரந்தரப் பணிக்குத் தேர்வாகாத மீதம் உள்ள 75 சதவிகித அக்னிவீர் வீரர்கள் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதாவது 17.5 வயதில் இருந்து 23 வயது வரை 4 வருடங்கள் ஒருவர் விரும்பி னால், அதற்கான தேர்வுகளை எழுதி ராணுவத்தில் 4 வருட காலப் பணிகளைச் செய்யமுடியும். பின்னர் அதில் 25 சதவிகித பேர் நீண்ட கால வீரர்கள் ராணுவத் தில் பணிக்குச் சேர்க்கப்படுவார்கள் என்பதே இந்தத் திட்டத்தின் சுருக்கம்.

இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப் படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவிகிதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பற்றி எரியும் போராட்டங்களுக்கு மத்தியில், அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ததற்காகப் பிரதமர் மோடிக்கு, அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாத் திட்டத்தின்கீழ் ஜூன் 24ஆம் தேதி ஆள்சேர்ப்பு பணி தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்த திட்டம் தற்போது கலவரங்களையே விளைவுகளாக கொடுத் துள்ளது. மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பொரு ளாதார கட்டமைப்பு என்பது வேறு,  இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு என்பது முற்றிலும் மாறுபட்டது

குடும்ப சூழல் கருதி கண்டிப்பாக ராணுவ வேலைக்கு செல்லும் நிலைக்கு இளை ஞர்கள் தள்ளப்பட்டு விடுவர் என சுட்டுக்காட்டும் சமூக ஆர்வலர்கள், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள் அனைவரும் ஜவான் நிலையிலுள்ள டிரைவர், செவிலியர், மெக்கானிக் போன்ற பணிகளில் தான் சேர்க்கப்படுவார்கள். இதன் காரணமாக ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்குச் செல்வது தடைப் பட்டு, சமூக படிநிலை உடையும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின் றனர்.

ராணுவத்தில் வேலை என்று ஆசை வார்த்தை காட்டினால், எப்படியாவது கஷ்டப் பட்டாவது மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஏழை இளைஞர்களின் கனவு சிதைந்து விடாதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்வி கள் எழுப்பப்படுகின்றன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...