வரலாற்றில் இன்று – 20.07.2021 சர்வதேச சதுரங்க தினம்

 வரலாற்றில் இன்று – 20.07.2021 சர்வதேச சதுரங்க தினம்

உலக சதுரங்க கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும்.

இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20ஆம் தேதியை சர்வதேச சதுரங்க தினமாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.

கிரிகோர் மெண்டல்

மரபியலின் தந்தை கிரிகோர் ஜோஹன் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே இவருக்கு மரபுப் பண்புகள் ஆராய்ச்சிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே, தனது தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

இவர் மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவையே மெண்டலின் விதிகள் எனப்படுகின்றன.

உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்த மெண்டல்; 1884ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1937ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி மறைந்தார்.

1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி தற்காப்புக்கலை நிபுணரும், ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...