வார ராசிபலன்கள் (03.05.2021 – 09.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (03.05.2021 – 09.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சிறு மற்றும் குறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.
வழிபாடு :
முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ;டங்கள் குறையும்.

ரிஷபம் :
உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நினைவாற்றல் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வித்தியாசமான செயல்முறைகளின் மூலம் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
வழிபாடு :
விஷ;ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பணப்பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் :
எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நறுமணப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வழிபாடு :
பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடகம் :
உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமான உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சிலருக்கு கிடைக்கும். பத்திரிக்கை மற்றும் எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர் தொடர்பான பணிகளில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும்.
வழிபாடு :
விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.

சிம்மம் :
மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு அமையும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வீடு மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்.

கன்னி :
தந்தைவழி சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொருளீட்டுவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
வழிபாடு :
புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

துலாம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனக்கவலைகள் நீங்கி தெளிவு ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் அவ்வப்போது உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது நல்லது. மூத்த சகோதரர்களிடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
குலதெய்வத்தை வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :
வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தூர தேசங்களில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். நிர்வாகத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

தனுசு :
மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். வருமானத்தை தகுந்த வழிகளில் முதலீடுகளை செய்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் சிலருக்கு கிடைக்கும். தவறிப்போன சில பொருட்களும், வாய்ப்புகளும் மீண்டும் கிடைக்கும். சேமிப்புகள் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
வழிபாடு :
வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்துவர நன்மைகளும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம் :
பொறுமையுடன் செயல்பட்டு காரிய வெற்றியை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். ரகசியமான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலங்குகள் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பயணங்களை மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.
வழிபாடு :
பைரவரை வழிபாடு செய்துவர எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கும்பம் :
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் புதுவிதமான அனுபவம் சிலருக்கு ஏற்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருக்கமான நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கும்.
வழிபாடு :
மாரியம்மனை வழிபாடு செய்துவர எதிர்ப்புகள் விலகும் மற்றும் காரிய வெற்றி உண்டாகும்.

மீனம் :
அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். அபிவிருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நன்மதிப்பையும், மேன்மையையும் உண்டாக்கும்.
வழிபாடு :
நரசிம்மரை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...