வார ராசிபலன்கள் (30.11.2020 – 06.12.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (30.11.2020 – 06.12.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது சிறப்பு. நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தந்தையின் ஆலோசனையின்படி நடப்பது நன்மையளிக்கும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் திடீரென்று கிடைக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு :
குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும்.

ரிஷபம் :

மனதில் தேவையற்ற குழப்பமான சூழல் உண்டாகும். மனைவியின் ஆசைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மாமன்வழி உறவுகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். காதலிப்பவர்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும். செய்யும் முயற்சிகளில் மந்தநிலை உண்டாகும். பழைய கடன் பாக்கி வசூலாகும்.

வழிபாடு :
துர்க்கை அம்மனை அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு கிடைக்கும்.

மிதுனம் :
உத்தியோகம் சம்பந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிகளில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், அனுகூலமும் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வாரிசுகள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.

வழிபாடு :
மகா விஷ;ணுவை வழிபாடு செய்து வர இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கடகம் :
செயல்பாடுகளில் அவ்வப்போது மந்தத்தன்மை ஏற்பட்டு மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் மலரும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்து வர மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம் :

மனை மற்றும் புதிய வீடுகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். வாகனங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தந்தையுடன் தேவையற்ற கருத்துக்கள் பரிமாறுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் தொழில் சார்ந்த இன்னல்கள் குறையும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

கன்னி :

இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தொழிலில் இலாபம் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை உருவாக்கி தரும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம் :

மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். பேச்சுக்களில் வேகமின்றி பொறுமையுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்படும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் மன அமைதி குறையும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடைமைகளை எடுத்து செல்லும் பொழுது கவனம் வேண்டும்.

வழிபாடு :
சப்த கன்னிகளை அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம் :

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்து செல்லவும். கோபமின்றி நிதானத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதன் மூலம் அவப்பெயரும், மனவருத்தமும் நேரிடலாம். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபாடு செய்து வர தனம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

தனுசு :

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், புதிய அறிமுகங்களும் கிடைக்கும். தம்பதியர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.

வழிபாடு :
சரஸ்வதியை வழிபாடு செய்து வர கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.

மகரம் :

எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வாகனங்களில் அவ்வப்போது பழுதுகள் ஏற்படலாம். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வித்தியாசமான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் நன்மையை அளிக்கும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம் :

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு வாரிசுகள் உறுதுணையாக இருந்து உதவிபுரிவார்கள். கடன் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர மனதில் தைரியம் உண்டாகும்.

மீனம் :

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு மனதிற்கு தைரியத்தையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும்.

வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...