வார ராசிபலன்கள் (16.11.2020 – 22.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (16.11.2020 – 22.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகள் மாற்றமான சூழலை உண்டாக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பும், ஆதரவும் கிடைக்கும்.

வழிபாடு :
குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும்.

ரிஷபம் :

முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். இளைய சகோதரர்களிடம் ஆதரவாக நடந்து கொள்ளவும்.

வழிபாடு :
துர்க்கை அம்மனை அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு கிடைக்கும்.

மிதுனம் :

மனதில் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமும், காலதாமதமும் உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகலாம். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி அமைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

வழிபாடு :
மகா விஷ;ணுவை வழிபாடு செய்து வர இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கடகம் :

பூர்வீக சொத்துக்களால் இலாபம் அடைவீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் தொடர்பான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்து வர மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம் :

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் வரவால் சுபவிரயங்கள் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

கன்னி :

எதிர்பார்த்த கடன் உதவிகள் காலதாமதமாகும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். சங்கீத பயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் புதனுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம் :

தாய்வழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். ஆடை, ஆபரணங்ள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். சக பணியாளர்களிடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தந்தையுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் ஏற்படும். பொதுச்செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும்.

வழிபாடு :
சப்த கன்னிகளை அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம் :

துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமான முடியும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபாடு செய்து வர தனம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

தனுசு :

வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

வழிபாடு :
சரஸ்வதியை வழிபாடு செய்து வர கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.

மகரம் :

பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம் :

நீர்நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய பலன்கள் உண்டாகும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர மனதில் தைரியம் உண்டாகும்.

மீனம் :

உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேம்படும். சர்வதேச வணிகத்தில் எண்ணிய இலாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேம்படும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அந்நியர்களால் வருமானம் மேம்படும்.

வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...