அம்பாள்: பிரம்மச்சாரிணி
நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்:
அம்பாள்: பிரம்மச்சாரிணி
நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்,
கோலம்: கட்டம் வகையிலான கோலம் போட்டு வழிபட வேண்டும்.
மலர்கள்: முல்லை, இலைகளில் மருவு
நெய்வேத்தியம் : புளியோதரை மற்றும் வேர்க்கடலை சுண்டல் படைத்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் கல்யாணி
பழங்கள்: பழங்களில் மாம்பழமும் படைக்க வேண்டும்.
இந்த நாளில் அன்னைக்கு சாம்பல் நிற வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். நாமும் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

