இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 15 செவ்வாய்க்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை 15-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் இனம் தெரியாத உற்சாகம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக்  கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினகள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர் கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறிய அளவில் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். மாலையில் குடும்பத்தினருடன் நண்பர் அல்லது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.

துலா ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் பக்குவமாகப் பேசி காரியம் சாதித்துக்கொள்ள முயற்சி செய்யவும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.  வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் செலவுகளுடன் உற்சாகம் ஏற்படும்.உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமார்தான். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மனதில்  உற்சாகம் ஊற்றெடுக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.  வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

 உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும் என்ப தால் கையிருப்பு கரையும். சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.. மாலையில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர் கள் சிலர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவல கத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். அதிகாரிகளால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். ஆனாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங் கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும்.  அலுவலகத்தில் வழக்க மான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!