வரலாற்றில் இன்று (பிப்ரவரி 03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 3 (February 3) கிரிகோரியன் ஆண்டின் 34 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார்.

1488 – போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார்.

1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.

1661 – மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.

1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1706 – புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி வளைப்பு உத்தியைப் பயன்படுத்தி வென்றது.

1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படை இடச்சின் கட்டுப்பாட்டில் இருந்த சின்டு யுசுடாசியசு என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றியது.

1783 – ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.

1807 – பிரித்தானியப் படை சர் சாமுவேல் ஓசுமுட்டி தலைமையில் மொண்டேவீடியோவைக் (இன்றைய உருகுவேயின் தலைநகர்) கைப்பற்றியது.

1830 – கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1876 – பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]

1913 – ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.

1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.

1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனியுடனான தூதரக உறவைத் துண்டித்தது.

1930 – பிரித்தானிய ஆங்காங்கின் கவுலூனில் இடம்பெற்ற மாநாட்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1931 – நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் உயிரிழந்தனர்.

1943 – டோர்செசுடர் என்ற அமெரிக்கக் கப்பல் செருமனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில், 902 பேரில் 230 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க இராணுவ, கடற்படைகள் சப்பானிடம் இருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: மணிலா நகரை சப்பானிடம் இருந்து கைப்பற்ற அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ஒரு மாதம் நீடித்த போரைத் தொடங்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.

1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

1969 – யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.

1972 – ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியது. அடுத்த ஏழு நாட்களில் 4,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1984 – அமெரிக்காவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்ணில் இருந்து மற்றொருவருக்கு கருமாற்றம் வெற்றிகரமாக நிறைவேற்ரப்பட்டது.

1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

1989 – பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெசுனர் பதவியிழந்தார்.

1998 – இத்தாலியில் தாழப் பறந்த விமானம் ஒன்று கம்பிவட ஊர்தியொன்றின் கம்பிகளை அறுத்ததில், 20 பேர் உயிரிழந்தனர்.

1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

2007 – பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர்.

2014 – மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

பிறப்புகள்

1504 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (இ. 1577)

1821 – எலிசபெத் பிளாக்வெல், அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 1910)

1893 – லியோனோரா பில்கெர், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1974)

1898 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்துக் கட்டிடக் கலைஞர் (இ. 1976)

1899 – லாவ் ஷே, சீன எழுத்தாளர் (இ. 1966)

1900 – டி. ஆர். சேஷாத்ரி, தமிழக வேதியியலாளர் (இ. 1975)

1930 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 2012)

1933 – தான் சுவே, பர்மிய அரசியல்வாதி, பிரதமர்

1938 – வஹீதா ரெஹ்மான், இந்தியத் திரைப்பட நடிகை

1944 – கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (இ. 2004)

1963 – ரகுராம் கோவிந்தராஜன், இந்தியப் பொருளியல் அறிஞர், கல்வியாளர்

1966 – பிராங்க் கெரசி, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

1983 – சிலம்பரசன், தமிழக நடிகர்

இறப்புகள்

1468 – யோகான்னசு கூட்டன்பர்கு, அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்த செருமானியர் (பி. 1398)

1855 – டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்

1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய இயக்குநர், இசையமைப்பாளர் (பி. 1813)

1900 – எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை, தமிழகக் கிறித்தவத் தமிழ்ப் புலவர் (பி. 1827)

1915 – யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)

1919 – எட்வார்டு சார்லசு பிக்கரிங், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1846)

1924 – ஊட்ரோ வில்சன், அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1856)

1925 – ஆலிவர் ஹெவிசைடு, ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)

1964 – கதிரவேலு சிற்றம்பலம், ஈழத்து அரசியல்வாதி (பி. 1898)

1969 – கா. ந. அண்ணாதுரை தமிழகத்தின் 7வது முதலமைச்சர், எழுத்தாளர் (பி. 1909)

1975 – வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1873)

1975 – உம் குல்தூம், எகிப்தியப் பாடகி, நடிகை (பி. 1904)

1987 – ஜார்ஜ் தாம்சன், பிரித்தானிய மார்க்சியப் புலமையாளர், மானிடவியலாளர் (பி. 1903)

2005 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர், பறவையியலாளர் (பி. 1904)

2016 – பல்ராம் சாக்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1923)

சிறப்பு நாள்

கம்யூனிஸ்டுக் கட்சி நிறுவன நினைவு நாள் (வியட்நாம்)

மாவீரர் நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!