புல்வாமா தாக்குதல் நடந்து 1 ஆண்டு ஆன நிலையில் அவர்களை நினைவுக்கூறும் கவிதைகளை இங்கே காணலாம்.
கடந்தாண்டு பிப் 14ம் தேதி இதே நாளில் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு காரை மோதி அவர் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்தார். இதில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.
இந்தியாவில் நாம் நிம்மதியாக இருக்க நம்மை நோக்கி வரும் ஆபத்துக்களை எல்லாம் ராணுவ மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தான் வாங்கிக்கொண்டு நம்மைக் காக்கிறார்கள். 39 வீரர்கள் இப்படியாக ஒரு தாக்குதலில் நாம் இழந்திருப்பது வேதனையளிப்பதாக இருந்தது. பலர் இவர்களது மரணத்திற்காகக் கண்ணீர் விட்டனர்.
இன்று அந்த வீரர்கள் மறைந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் அந்த அந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களை இன்று நாம் நினைவுகூறுவதற்காகக் கவிதைகள் மற்றும் புகைப்படங்களை உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்.
Tags: உமா
