இனிஇவர் போல்எவர் பிறப்பார்

 இனிஇவர் போல்எவர் பிறப்பார்

இனி
இவர் போல்
எவர் பிறப்பார் ?

கரும்பாய் வாழ்ந்த
இந்தியாவின்
இரும்பு மனிதர்
இரத்தன் டாட்டா –
இறைவனடி சேர்ந்தாரே!

தொடங்கிய
தொழில்கள் அனைத்திலும்
தொடர் வெற்றி கண்ட
தொழிதிபர் என்றாலும்
தோழமையுடன்
இவர் போல் எவரால்
தொண்டாற்ற முடியுமா ?

இரும்புக்குள்
ஈரம் கசியுமா ?
ஆடம்பரத்துக்குள்
அடக்கமிருக்குமா ?
வசதி படைத்த வானம்
வறியோருக்காய்
தரையிறங்குமா ?

முடியும் என்ற
முன்னுதாரணத்தின்
மூச்சு முடிந்து போனது

ஈரம் கொண்ட இரும்பு
துருப்பிடிக்காமல்
இருக்கும் அதிசயம்
இந்தியாவில் மட்டுமே இவரால் சாத்தியமானது!

பேருக்கு வாழ்கின்ற
பெயரளவு மனிதர்களிடையே
ஊருக்காக வாழ்ந்து
உள்ளத்தால் என்றும்
உயர்ந்த மனிதரே

உன்னைப்போல் – இனி
உலகில் எவருண்டு ?
உரத்த சிந்தனையுடன்
உன் புகழ் பாடுகிறோம்

விண்ணுலகிலும்
டாடா நிறுவனம் நிறுவி
வியக்க வைக்க
சென்று வா தலைவா!
விடை தருகிறோம்
TATA BYE BYE

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...