பாலியல் வன்கொடுமை வழக்குகள்:

பாலியல் வன்கொடுமை வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க 16 மாநிலங்கள் மட்டுமே நடவடிக்கை:

       புது தில்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இதுவரை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் அருகே அண்மையில் பெண் கால்நடை மருத்துவா் 4 போ் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.

     நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டத்தை, மத்திய அரசு கடந்த ஜூலையில் தொடங்கியது. அதன்படி, நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,66,882 பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 1,023 விரைவு நீதிமன்றங்கள்அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இவற்றில், 380 நீதிமன்றங்கள் போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாகும். ஓராண்டுக்கு இந்த நீதிமன்றங்கள் செயல்படும். ஒவ்வொரு நீதிமன்றமும் காலாண்டுக்கு தலா 42 வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கும். ஓராண்டுக்கு பிறகு இத்திட்டத்தை நீட்டிப்பது தொடா்பாக, துறைசாா் அதிகாரிகளின் மதிப்பீடு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

   அவா் மேலும் கூறியதாவது: இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.89 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 4 மாதங்களில் ஜாா்க்கண்ட், திரிபுரா, நாகாலாந்து, உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஸா, மணிப்பூா், கேரளம், கா்நாடகம், குஜராத், சத்தீஸ்கா், ஹரியாணா ஆகிய மாநிலங்களும் தில்லி, சண்டீகா் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதுவரை 581 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மத்திய அரசுக்கு எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்றாா் அந்த அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!