இன்றைய ராசி பலன்கள் ( மே 25 சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 25-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் வைகாசி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 25.05.2024 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 11.16 வரை கேட்டை. பின்னர் மூலம்.அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

பிற்பகலுக்கு மேல் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தைவழி உறவி னர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகை யில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளையும் வீண் அலைச்சலையும் தவிர்ப்பது மிக அவசியம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் சிலருக் குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவில் எச்சரிக்கையாக இருக்கவும். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மிதுன ராசி அன்பர்களே!

செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும். உறவினர் களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றைக் கூற வாய்ப்பு உண்டு. சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங் கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண் டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் விற்பனை சுமார்தான். இன்று நீங்கள் அம்பிகையை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரம் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். விநாயகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். நண் பர்கள் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர் களால் சங்கடங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. பைரவரை வழிபட முயற்சிகள் சாதகமாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பண வரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வீண்செலவுகள் மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.

மகர ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிகரிக்கும் விற்பனை மகிழ்ச்சி தரும். அம்பிகையை வழிபட சிரமங்கள் விலகும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் தடைகள் விலகும்.

மீனராசி அன்பர்களே!

இன்றைக்கு புதிய முயற்சிகள் சாதகமாகும். வழக்கமான பணிகளையும் குறித்த நேரத்துக்குள் முடித்துவிட்டு உற்சாகமாக இருப்பீர்கள். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!