ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் அள்ளும் இந்தியர்கள்! | தனுஜா ஜெயராமன்

 ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் அள்ளும் இந்தியர்கள்! | தனுஜா ஜெயராமன்

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். இதன் 6 ஆம் நாள் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சுரேஷ் குசால் மற்றும் அகில் ஷியோரன் களம் கண்டனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தி வருகிறது. இந்தியா பதக்கப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் இரு பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கின்றனர் இரு இளம் வீராங்கனைகள் . 17 வயதேயான இளம் இந்திய வீராங்கனை பலாக், 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். தொடர்ந்து அதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான 18 வயதான ஈஷா சிங், வெள்ளிப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.

2024ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்கிறார் ஈஷா

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...