“நிறைவடைந்தது தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு”

 “நிறைவடைந்தது தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு”

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த நடிகர் விக்ரமின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தின் கதைக்களம் கேஜிஎஃப் தோன்றுவதற்கு  முன்பு அந்த கேஜிஎஃப் நிலத்தில் வாழ்ந்த, தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதை.

தனது திரைப்படங்களின் மூலம் சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கும் பா ரஞ்சித், தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எந்த மெனக்கெடல்களையும் அசால்டாக கையாளும் விக்ரம்.  இவர்களின் இந்த காம்போ மக்கள் மத்தியில் தங்காலன் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட விலா எலும்பு  முறிவால் எதிர்பார்த்ததை விட படப்பிடிப்பு சற்று தாமதமாகவே நிறைவடையவுள்ளது என்ற தகவல் வெளியாகியது, சமீபத்தில்  தனது கதாபாத்திரத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகை பார்வதி இன்ஸடாவில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தங்காலன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் ” என்ன ஒரு பயணம், மிகவும் அற்புதமான சிலருடன் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன், ஒரு நடிகராக இந்த படம் எனக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தையும் கொடுத்துள்ளது. முதல் நாள் ஷூட்டிங்கிற்கும் கடைசி நாளுக்கும் இடையே வெறும் 118 நாட்கள்தான் இருந்ததா? இந்த கனவை ஒவ்வொரு நாளும் நனவாக்கியதற்கு நன்றி ரஞ்சித்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார். விக்ரமின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...