வரலாற்றில் இன்று – 28.08.2021 அய்யன்காளி

 வரலாற்றில் இன்று – 28.08.2021 அய்யன்காளி

தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத்தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.

இவரால், கேரளாவில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, ‘ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தந்தது.

சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றிற்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.

தன் சமூக மக்களை ஒன்றுபடுத்தி சாதுஜன பரிபாலன சங்கம் என்ற அமைப்பை 1905ஆம் ஆண்டு தொடங்கினார். காந்தியடிகள் 1937ஆம் ஆண்டு வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி தனது 77-வது வயதில் (1941) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1789ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது.

1891ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திராவிட மொழியியலின் தந்தை, ராபர்ட் கால்டுவெல் மறைந்தார்.

1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய எழுத்தாளர், கவிஞர், விமர்சகரான ஃபிராக் கோரக்புரி (Firaq Gorakhpuri) கோரக்பூரில் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...