கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது! | தனுஜா ஜெயராமன்

 கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது! | தனுஜா ஜெயராமன்

இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் பெருமளவு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது என்கிறார்கள்.

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
இரு நாட்டு அரசுகளும் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் தற்போது இந்திய அரசு கனடாவில் இருக்கும் இந்தியர்களை அந்நாட்டின் சில முக்கிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கனடா நாட்டுக்கான விசா சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...