நிஜக் கவிஞன்/ மு. மேத்தாவின் பிறந்த நாள்

 நிஜக் கவிஞன்/ மு. மேத்தாவின் பிறந்த நாள்

வார்த்தைகளை மடக்கிப் போட்டுக் காட்டி இதுதான் கவிதை என்று சுட்டி காட்டப் பட்ட காலக் கட்டத்தில் வாழ்க்கையை மடக்கிப் போட்டு க் காட்டிய நிஜக் கவிஞ்ன் மி. மேத்தாவின் பிறந்த நாள்= இன்று-செப்-5

சாம்பிள் இதோ:

நீ என்

கவிதைகளை ரசிப்பதாகக்

கூறிய பிறகு

என் கவிதைகளெல்லாம்

உன்னை மட்டுமே

ரசிக்கத் தொடங்கி விட்டன.

படித்து முடிந்ததும்

கொடுத்ததைத்

திருப்பி வாங்கிக் கொள்வதற்கு

இது

புத்தகமல்ல

இதயம்

கை நழுவ

விட்டால்தான்

உடைந்து போகும்

என்பதற்கு

இது

கண்ணாடியல்ல

மனது

மாபெரும் கூட்டத்தின்

மத்தியிலும்

என் கண்கள்

கேட்டுக் கொண்டே

இருக்கின்றன…

நீ

எங்கிருக்கிறாய் என்று.

அருகில் நீ இருந்த போது

என்னையே கேட்டுக் கொண்டேன்

“நான் யார்?” என்று….

இங்கிருந்து நீ

போய் விட்ட பிறகு

இவர்கள் என்னைக் கேட்டார்கள்

“நீ யார்?” என்று!

thanks aanthai reporter

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...