நாளை முதல் தொடங்குகிறது கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் பரிசோதனை-​செய்தி தினதந்தி

 நாளை முதல் தொடங்குகிறது கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் பரிசோதனை-​செய்தி   தினதந்தி

FILE PHOTO: A woman holds a small bottle labeled with a “Vaccine COVID-19” sticker and a medical syringe in this illustration taken April 10, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பு மருந்தை கொண்டு மனிதர்களிடத்தில் பரிசோதனை மேற்கொள்ள எய்ம்ஸ் நெறிமுறைக்குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாளை முதல், இதற்கான முதல் கட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்துவதில் தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 வயது நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு எந்த வித நோயும் இல்லாமல் பூரண உடல் நடத்துடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு நடைமுறையும் நாளை முதல் நடைபெறும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சஞ்ஜெய் ராய் தெரித்துள்ளார்” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...