இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 08 திங்கட்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை 08-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஆனி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை 08.07.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.44 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 07.22 வரை பூசம் .பின்னர் ஆயில்யம்.மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களின் மூலம் முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி முடிவுக்கு வரும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கடக ராசி அன்பர்களே!

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலா ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். சுதர்சனர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம். துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிள்ளை களால் வீண் அலைச்சலுடன், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகாவிஷ்ணுவை வழிபடு வதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

கும்பராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அம்பிகை யை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வாழ்க் கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்மாமன் வழியில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சில ருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடு வதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!