மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு

 மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு


செய்தி துறைகளில் பணியாற்றி மூத்த பத்திரிகையாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் திருநாவுக்கரசு (52). பத்திரிகையாளர் பணியில் 25 ஆண்டுகளாக பயணித்த இவர் தனியார் செய்தி தோலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.


நேற்று இரவு வழக்கம்போல பணியில் இருந்த இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். மந்தைவெளியில் வசித்து வந்த திருநாவுக்கரசு, திருப்பூர் மாவட்டம் எரிசனம்பட்டியைச் சேர்ந்தவர்.

இன்று காலை இவரது உடல் மந்தைவெளியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி சடங்கிற்காக அவரது பூர்வீக கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊடகத்துறையில் திருநாவுக்கரசின் பெயர் மிகவும் பிரச்சயம் ஆனது. இதனால் பலரும் இவரது இறப்பை குறித்து வருந்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் தெரிவுத்துள்ளதாவது, ”திருநாவுக்கரசு அவர்கள் பணியில் இருந்தபோதே மறித்துள்ள சம்பவத்தை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இவர் அச்சு மற்றும் ஊடக துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.

பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அவரது மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்” என கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசுடைய மரண செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி தனது பத்திரிகையாளர் பணியை சிறப்பாக செய்து வந்தவர். அவர் இறப்பால் வாடும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...