தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் 1897ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தார். உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுவுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945ஆம் ஆண்டு வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார். இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951ஆம் ஆண்டு நாடு திரும்பினார். மேலும் […]Read More
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் பிறந்தார். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன. சமூகத் தேர்வு (Social Choice) என்ற கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே. உணவு உற்பத்தி மட்டும் போதாது. அதை வாங்கும் சக்தி மக்களுக்கு […]Read More
கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் (Alfred Wegener) 1880ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிறந்தார். இவர் வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டினார். துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகாலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார். கண்டங்களின் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912ஆம் ஆண்டு வெளியிட்டார். […]Read More
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் தன் வக்கீல் […]Read More
“சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சிக்கன தினம் அக்டோபர் மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. பசும்பொன் தேவர் சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். […]Read More
தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும். 1958ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்’ என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963ஆம் ஆண்டு ‘கற்பகம்’ என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து […]Read More
சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘சர்வதேச அனிமேஷன் தினம்’ கொண்டாடப்படுகிறது. 1892ஆம் ஆண்டு சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association-ASIFA), 2002ஆம் ஆண்டு இந்நாளை அறிமுகப்படுத்தியது. பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் […]Read More
காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ […]Read More
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து வந்தவர்,’ஹமாரி ஆத்மோசர்கதா’ என்ற தனது முதல் நூலை 16 வயதில் எழுதினார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் காந்திஜியை முதன்முறையாக 1916ஆம் ஆண்டு சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். விடுதலைப் போராட்டம், சமூகப் பொருளாதார புரட்சி, விவசாயிகள், ஜாதி, மதப் பிரச்சனைகள் குறித்து […]Read More
20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார். தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார். […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )