இன்றைய ராசி பலன்கள் ( ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 13-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.04.2025 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.03 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.இன்று இரவு 09.01 வரை சித்திரை. பின்னர் சுவாதி.பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும்.  எதிர் காலத்துக்குப் பயன்  தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களி டம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். முருகப்பெருமானை  வழிபட நன்மைகள் கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும்  வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது.  உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பைரவரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று அம்பிகையை வழிபட அல்லல் கள் குறையும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள்  உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். தட்சிணாமூர்த்தியை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி ராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவி னர்கள் மூலம் கிடைக்கும் செய்தி அளவற்ற மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத் தில் வழக்கமான நிலையே காணப்படும். இன்று நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட தடைகள் விலகும்.

துலா ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.  மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும், செலவுகளும் ஏற்படக்கூடும். நரசிம்மரை வழிபட நினைத்த காரியங்கள் நிறை வேறும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதன் காரண மாக உடல் அசதி ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகத் துடன் ஈடுபடுவார்கள். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். சக வியாபாரிகள் அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். இன்று ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மகரராசி அன்பர்களே!

சகோதரர்களால் சில சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.  சிலருக்கு தந்தை யிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். இன்று சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பண லாபம் உண்டாகும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். சகோதர வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். நன்மைகள் அதிகரிக்க அம்பிகையை வழிபடவும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதன் காரணமாக லாபம் குறைவாகவே இருக்கும். இன்று விநாயகரை வழிபடுவது நலம் தரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!