இன்றைய ராசி பலன்கள் ( மார்ச் 11 செவ்வாய்க்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 11-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மாசி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.03.2025 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.30 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று அதிகாலை 03.07 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக  முடியும். திடீர் செலவு கள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால்  சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண் டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர் பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றா லும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் களால் ஆதாயம் கிடைக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரி யின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனாலும், புதிய முயற்சிகளை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள் வது சாதகமாக முடியும்.  தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று வந்து சேரக் கூடும். நண்பர்களால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.  பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சி களுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தந்தை வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங் களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை.  சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவ லகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமை தேவை.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஈடுபடவும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர் களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக் கும். சக ஊழியர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு குடும்ப விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலைவேளையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனை விக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அலுவலகத்தைப் பொறுத்தவரை  உற்சாக மான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கும்பராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும்  தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச்  சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களால் ஆதாயம் கிடைப்ப தற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!