சீனா பிரதமர் வாறாருங்கோ வாகனங்களுக்கு தடையாம்


சீனா பிரதமர் வாறாருங்கோ 

அக்டோபர் 11 மற்று 12 ஆகிய தேதிகளில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீஜின்பிங் ஆகியோர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதுஇதற்காக, முக்கிய சாலைகளின் வழித்தடங்களில்அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை, கிண்டியில் உள்ள சர்தார் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகனங்களுக்கு தற்போது முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 11, 12ம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் ஜி.எஸ்.டி சாலை வழியே வரும் வாகனங்களில் கத்திப்பாரா வழியே கிண்டி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!