ஜூன் 12ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர்.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடுகிறார்.

இதன்மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும். டெல்டா மாவட்ட விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர்.

மேலும் மேட்டூர் அணையில் மதகுகள் சீரமைப்பு பணி, நெடுஞ்சாலை சார்பில் சாலையோரத்தில் வளர்ந்திருந்த புல், பூண்டுகள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டுள்ளன.

அணைக்கு 5,980 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!