இன்றைய ராசி பலன்கள் ( மே 16 வெள்ளிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 16-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும்.  தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக் காது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். ஷண்முகக் கடவுளை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

கடக ராசி அன்பர்களே!

பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோ தரர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பணி களில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர்களுக்காக செலவு  செய்ய நேரிடும். மற்றவர் களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும் போல் இருக்கும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள்  முயற் சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வீண் செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க் கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி  குழப்பங்கள் ஏற்பட்டு நீங் கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரி டும். சிலருக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் கனிவான அணுகு முறை அவசியம். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனக் குழப்பங்கள் நீங்கும்.

துலா ராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத் துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.  மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே  ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மன தில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவி னர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.  கணவன் – மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை. ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.

மகரராசி அன்பர்களே!

பணவரவு இருந்தாலும்  திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். அவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு  உள்ளதால் பொறுமையுடன் அவசியம். வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு  செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் சில சிரமங்கள் ஏற்படும்.  மகான் ஷீர்டி சாய்பாபாவை வழிபட மன அமைதி பெறலாம்.

மீனராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு சகோதரர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். மூன்றாவது நபர் களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். விநாயகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!