இன்றைய ராசி பலன்கள் ( மே 14 புதன்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 14-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற் படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. தொடங்கும் காரியம் இழுபறியானாலும் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம்போல் நடை பெறும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம்  கைக்குக்  கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். லாபமும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் வீண் செலவுகளும் பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

துலா ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். எதிர்பாராத ஆதாயங்களுக்கு வாய்ப்பு உண்டு.  சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று  சரபேஸ்வரரை வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்து விடும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டை கண்டிப்பாக அனுமதிக்கவேண்டாம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடி யும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் ஊக்கத்து டன் செயல்படுவார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன்  மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொரு வர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பொறுமை மிக அவ சியம். இன்று அம்பிகையை வழிபடுவது மிகச் சிறப்பு.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவை யற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அவர் மூலம் பணவரவும் உண்டு. வியாபாரம் அமோகமாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு விஷயத் தில் கவனமாக இருக்கவும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். இன்று நீங்கள் ஆஞ்ச நேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!