இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
குஜராத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ராஜ்கோட்டில் இருந்து 160 கிலோ மீட்டர் வடக்கே கஞ்ச் நகரை மையமாக கொண்டு இரவு 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
