இன்றைய ராசி பலன்கள் ( ஏப்ரல் 12 சனிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 12-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 12.04.2025 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.12 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.இன்று மாலை 06.31வரை அஸ்தம். பின்னர் சித்திரை.சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு  வருவார்கள். முக்கியமான முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதில் ஏற்பட்டிருந்த குழப் பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் கூடுதலாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன் றைக்குத் தவிர்ப்பது நல்லது.  எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த மனவருத்தங்கள் நீங்கும்.  தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும், பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று  அம்பிகையை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு கையிருப் பைக் குறைக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. மகாவிஷ்ணு வழிபாடு மன அமைதி தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்களில் அனுகூலம் உண்டா கும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை  அனுமதிக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று அம்பிகையை வழிபடுவதன் மூலம் அதிக நற்பலன்களைப் பெறலாம்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். உறவினர்கள் வகையில் சில சங்க டங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு. பிற்பகலுக்கு மேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களிடம் கேட்டிருந்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கத்தைவிட  அதிகமாக இருக்கும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்

துலா ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்ப னையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய் வார்கள். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். விநாயகரை வழிபட மனக் குழப்பங்கள் நீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.  பிள்ளைகளின் பணிகளில் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். தட்சிணாமூர்த்தி  வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மகரராசி அன்பர்களே!

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி  செய்யவும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் மனதுக்கு உற்சாகம் தரும். ஆறுமுகப் பெருமானை வழிபட அனுகூலப் பலன்கள் அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

காரியங்கள் இழுபறியானாலும் முடிந்து விடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளை களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பைரவரை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

மீனராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். சிலருக்கு தாய்வழி  உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச் னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு  இருக்காது. சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!