இன்றைய ராசி பலன்கள் ( 26 மார்ச் செவ்வாய்க்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 26ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 26.03.2024. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் 01.42 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் எளிதாக சமாளிப்பீர்கள். தந்தையின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாலை வேளையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. விநாயகரை வழிபடுவதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பம் அல்லது வேலை தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

மிதுன ராசி அன்பர்களே!

நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்த்துவிடும்.

கடக ராசி அன்பர்களே!

எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரித்தாலும் அதைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மகாலட்சுமியை வழிபட செலவுகளைச் சமாளித்துவிட முடியும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை ஆலோசித்து இறங்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். பணிகளில் நிதானம் அவசியம். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். செயல்களிலும் அது வெளிப்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிவபெருமானை வழி படுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன்பு நன்கு ஆலோசித்துச் செயல்படவும். பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

கும்பராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பப் பெரியவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மீனராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!