திருச்சி வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் செல்லும்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண்:- 07111 ஹசூர் சாஹிப் நந்தேத்-கொல்லம் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி, 27-ந் தேதி மற்றும் டிசம்பர் 4-ந் தேதி, 11-ந் தேதி, 18-ந் தேதி, 25-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 1-ந் தேதி, 8-ந் தேதி, 15-ந் தேதி ஆகிய (வியாழக்கிழமை) நாட்களில் ஹசூர் சாஹிப் நந்தேத் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் அதிகாலை3 மணிக்கு கொல்லத்தை சென்று அடையும்.

இதே ரெயில் மறுமார்க்கத்தில் வண்டி எண்:- 07112 கொல்லம்-ஹசூர் சாஹிப் நந்தேத் சிறப்பு ரெயில் வருகிற 22-ந் தேதி, 29-ந் தேதி, டிசம்பர் 6, 13, 20, 27-ந் தேதிகள் மற்றும் ஜனவரி 3, 10, 17-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஹசூர் சாஹிப் நந்தேத் ரெயில் நிலையத்தை சென்று அடையும்.

இந்த மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!