இன்றைய ராசி பலன்கள் ( 25 மார்ச் திங்கட்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 25 மார்ச் திங்கட்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 25ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 25.03.2024 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.16 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று காலை 11.19 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். திருவோணம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

காலையிலேயே தொடங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கைவசம் பணம் இருந்தாலும் தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மூன்றாவது நபரின் தலையீடு காரண மாக கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிக ரிக்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

கடக ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் இழுபறியாக இருந்த அப்ரூவல் அல்லது அனுமதி தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட லாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண் டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடிய வாய்ப்புண்டு. என்றாலும் சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

குடும்பம் மற்றும் பணி தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி மன நிம்மதி தரும்.

துலா ராசி அன்பர்களே!

காலை முதலே உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். என்றாலும் மகிழ்வுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக் கொள்வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளை கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

செயல்களில் இருந்த இழுபறி நீங்கி அனுகூலமாக முடியும் நாள். குடும்பத்தினர் உங்கள் பேச்சை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் பண உதவி கேட்டு வருவார்கள். ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

தனுசு ராசி அன்பர்களே!

சகோதரர்கள் வகையில் எதிர்பாராத அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். முக்கிய விஷயங்களில் அவசர முடிவுகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே!

முற்பகலில் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி உற்சாகம் பிறக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காகச் செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. கால பைரவரை வழிபடுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

மீனராசி அன்பர்களே!

வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்து கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...