ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண் வெருள்புரிமான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே –திருவாசகம் “அனாயாச மரணம்”- இதுவே மனிதர்களின் நோக்கம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து இறுதியில் அவஸ்தை இல்லாமல், மரண பயம் இல்லாமல் இறைவன் பாதத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். […]Read More
Tags :தலம்தோறும் தலைவன்
திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -திருவாசகம் இந்த உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த ஐவகை அம்சங்களே மனித உடலில் ஆட்சி செலுத்துகிறது. மனிதனுக்குள் மறைபொருளாக ஈசனே அருள் ஆட்சி செய்கிறான். துன்பம் சூழ்ந்த இந்த மண்ணுலகுக்கு வந்த உயிர்கள் ஈசனின் திருவடி […]Read More
திருமுதுகுன்றம் ஸ்ரீ பழமலைநாதர் மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் ஆனந்தம் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம். –திருவாசகம் முக்தியை விரும்பாதோர் யார்? அமைதியான, நிம்மதியான மரணமே மனிதர்கள் விரும்புவது. மரணமில்லாப் பெருவாழ்வு என்று கூறுவதும் வாழும் நாள் வரை இறை சிந்தனையில் மூழ்கி, இறை நாமத்துடன் கழித்து, அந்த இறை சக்தியுடனேயே ஒன்றி விடுவது. […]Read More
திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியையும் வேதியன் தாதை தனித் தாள் இரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகனே சோறு பற்றினவா தோள் நோக்கம் -திருவாசகம் இறை எனும் சக்தி எல்லையற்ற கனிவுடன் நம்மைச் சுற்றிப் பரவியுள்ளது. சரியான நேரம் பார்த்து, தேவையான கருணையை அது மழையாகப் பொழிகிறது. எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும், அந்த மழையில் நம் உள்ளம் குளிரும் என்பது நிச்சயம். நெருப்பாய்ச் சுடும் தருணங்களில் மழையாய்க் […]Read More
5.செவ்வந்தி நாதர் (ஸ்ரீ தாயுமானவர்) நிலம், நீர், நெருப்பு, உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றானை உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே பலஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம் உலக உயிர்கள் அனைத்திற்கும் அம்மையும், அப்பனுமாக இருப்பவன் ஈசன். எனவேதான் அவனை அம்மையப்பன் என்று அழைக்கிறோம். வேதம் பரமாத்மாவையே உலக தத்துவம் என்கிறது. அந்த பரம தத்துவமே ஈசனாக உருவெடுத்து […]Read More
தில்லையில் நின்றாடும் நடராஜர்!! பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச் செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம் விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ. –திருவாசகம். இந்தப் பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற அந்த ஐம்பூதங்களே இயக்கு சக்திகள். அந்தச் சக்தி வடிவாய் விளங்குவது ஈசன். சிலர் பிரபஞ்சம் வேறு, […]Read More
3.காஞ்சிபுரம்ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டாய் கன்றால் விளைவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவித் குன்று ஆர் குழலினீர் தோள் நோக்கம் ஆடாமோ திருவாசகம் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. கரையை முட்டி மோதும் அலைகள் போல் ஆசைகள் மனதை அமைதியாக இருக்க விடாமல் அசைத்துக் கொண்டே இருக்கிறது. அது உள்ளிருக்கும் ஆத்மாவை இறைவனுடன் ஒன்ற விடாமல் உலகாயுத விஷயங்களில் சிக்க வைத்து, நம்மை […]Read More
2. திரு உத்தரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரர் வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக் கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கு அரசே தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழும் சுடரே திருவாசகம் இறைவனுக்கு என்று சொந்த ஊர் இருக்கிறதா? உலகமே அவன் வீடு எனும்போது அவனுக்கு என்று ஊர் உள்ளதா? சிவம் என்பது என்ன? அது ஒரு பொதுவான சொல். சிவம் என்றால் எல்லா […]Read More
நம் பாரத பூமி புண்ணிய பூமி. அன்பு மயமாய் விளங்கும் சிவனை வணங்குதல் அவற்றுள் முக்கியமானது. அன்பானவன். அருட்பெருஞ் ஜோதி வடிவினன். மங்களமாய், மறைபொருளாய் இந்தப் பிரபஞ்சமாய் நிறைந்திருக்கும் ஈசனுக்காக குமரி முதல் பனி நிறைந்த இமயம் வரை எண்ணற்ற ஆலயங்கள் நிறுவினார்கள் நம் முன்னோர்கள். சிவனின் இயல்புகளையும், அவனின் பெருமைகளையும் ஸ்ரீ பதஞ்சலியின் மகாபாஷ்யம் சிறப்பாக விளக்குகிறது. வியாசரின் சிவபுராணம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, தேவாரப் பதிகங்கள், திருவாசகம் போன்றவை சிவனின் மகிமைகளை, சிவனடியார்களின் பெருமைகளையும் […]Read More